பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012

 

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 என்பதுஇந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இச்சட்டம்மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும்மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும். இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைஇந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன

சட்டத்தின் பொதுவான அம்சங்கள்:

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்க லாம் என சட்டம் குறிப்பிடுகிறது. சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப் பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

குழந்தையின் நலனே பிரதானம்

சிறப்பு நீதிமன்றங்கள் இதற்காக நிறுவப் பட வேண்டும். வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பதுமுதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று சட்டம் கூறுகிறது. உதாரணமாக, “பாதிக்கப்பட்ட சிறுமி/சிறு வரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல் லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய் வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும். அப்போது காவலர் சீரு டையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது.”இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்/உற்றோரின் முன்னிலையில் செய்யப் படவேண் டும். பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது.வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப் பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக் கூடாது.குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப் படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது.

குறிப்பிடத் தகுந்த பிரிவுகள்;

குற்றம் இழைத்தவர்கள் மட்டுமல்ல, குற்றத்தை செய்யும் நோக்கத்துடன் அதற்காக முயற்சித்தவர்களும் குற்றவாளிகள் தான். பாலியல் வன்முறை செய்ய, ஒரு சிறுமியை இழுத்துச் சென்றிருக்கலாம். யாரோ வருகிறார்கள் என்பதற்காக விட்டு விட்டு ஓடியிருக்கலாம். பணம் திருடினாளா என்று பரிசோதிக்கவே தனியாக அழைத்து வந்தேன் என்று ஆசிரியர் கூறலாம். வழக்கு வந்தால், குற்றம் நடக்கவில்லையே என்று தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இச்சட்டம், தப்பிக்கும் வழியை மிகச் சரியாக அடைக்கிறது. குற்றத்துக்கு என்ன தண்டனையோ, அதில் பாதியை குற்றம் செய்யும் நோக்கத்துடன் முயற்சிப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.மற்றொரு முக்கிய பிரிவு, பாலியல் வன் கொடுமை குற்றத்தைப் பொறுத்தமட்டில், குற்றம் நடந்தது என்று மனுதாரர் ப்ராசிகியூஷன் தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை. குற்றவாளி தான், தான் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் பெயரையும், அடையாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையும் வெளியிடக் கூடாது என்பது தான் இதன் பொருள்.

இழப்பீடு/நிவாரணம்

சிறப்பு நீதிமன்றம் தாமாகவோ, அல்லது பாதிக்கப்பட்டோரின் மனுவின் அடிப்படையிலோ தேவையைப் பொறுத்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இறுதியில், குற்றவாளி தண்டனை பெற்றாலும், விடுவிக் கப்பட்டாலும் நிவாரணம் வழங்கலாம். குற்ற வாளியை அடையாளம் காண முடியாவிட்டாலும், தலைமறைவாகப் போய் விட்டாலும் கூட, இழப்பீடு வழங்கலாம். உடல் காயம், மன உளைச்சல், மருத்துவச் செலவு, குடும்பத் தின் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டும். மன/உடல் நிலை சரியில்லாமல் அல்லது விசாரணை, வழக்குக்குச் செல்வதற்காகப் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் கணக்கில் எடுக்க வேண்டும். எச்..வி. தாக்கியிருந்தால், கர்ப்பமாகி விட்டால், ஊனமடைந்து விட்டால் அவையும் எடுத்துக் கொள்ளப்பட்டு, இழப்பீடு வழங்கப் பட வேண்டும். மாநில அரசே நிவாரணத் தொகையை வழங்க வேண் டும். நீதிமன்ற உத்தரவு பெற்று 30 நாட்களுக்குள் இது அளிக்கப் பட வேண்டும்.இவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிந்தால்தானே, பாதிக்கப்பட்ட குழந்தை யும், பெற்றோரும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்? இவை குறித்து அவர்களுக்குக் கூறப்பட வேண்டும் என்பது இச்சட்டத் தின் கீழ் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. அதே போல் வழக்கின் விவரம் அவ்வப்போது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.தேசிய/மாநில குழந்தைகள் உரிமை பாது காப்பு ஆணையம் தான் இச்சட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க வேண்டும்

முக்கிய கூறுகள்

·        இந்த சட்டத்தின் படி ஒருவருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 50000ம் அபராதம் வசூலிக்கலாம்.

·        வாய்வழி பாலியல் உறவுக்கு குறைந்தது 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும

·        குழந்தைகளிடம் தவறான முறையில்(Fondling) நடக்கும் பெரியவர்களின் செயல்கள் பாலியல் தொந்தரவாக கருதப்படும். இச்செயல்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 வருடம் சிறை தண்டனை விதிக்கலாம

·        இச் சட்டத்தின் பகுதி 7ல் 16 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் உறவு வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளத

·        சிறுவர்களுக்கான பாலியல் தொல்லைகளை தடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளத

·        அனாதை ஆசிரமங்கள்சிறுவர் காப்பகங்கள், போன்ற இடங்களில் குழந்தைகளை கவனிப்பவர்கள் குழந்தைகளின் காப்பாளர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் குழந்தைகளிடம் தவறான முறையில் நடக்கும் பட்சத்தில் அது அவலமாக கருதப்படும்(aggravated offence). பாதுகாப்பு துறைகாவல்துறைஅரசு ஊழியர்கள், குழந்தைகள் காப்பகத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள்மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இந்த நம்பிக்கைக்குரியவர்கள் என்ற பட்டியலில் வருகிறார்கள்.

·        இவ் அவலங்களை புரிபவர்கள்மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியவர்கள் மீது பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்.

·        குழந்தைகளின் ஆபாசப் படங்கள் வைத்திருப்பதும் அதை ஊடகங்களில் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய சட்டமாக கருதப்படும். மேலும் ஊடகங்கள் மற்றும் புகைப்படம் எடுக்கும் நிலையங்கள் குழந்தைகளுகு எதிரான பாலியல் குற்றம் இழைக்கப்படும் தெரிந்த தகவல்களை அரசுக்கு தர அறிவுறுத்தப்படுகிறார்கள். தகவல் தராத பட்சத்தில் அது குற்றமாக கருதப்படும

·        இந்த புதிய சட்டம் குழந்தைகளை எல்லா விதமான பாலியல் குற்றங்களிலிருந்தும் பாதுகாக்கின்றது.


சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

*
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தால், 24 மணி நேரத்திற்குள் சிறுமிகள் பாதுகாப்பு சிறப்பு காவல் படை (Special Juvenile Police) அல்லது குடியிருக்கும் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்.



*
பாலியல் வன்முறை நடந்த 24 மணி நேரத்தில் மாவட்ட சிறுவர் நலகமிட்டி (CWC) அல்லது சிறப்பு நீதி மன்றத்தில் (Special Court) சிறுமியை ஆஜர்படுத்தி வாக்கு மூலம் பதிவு செய்ய வேண்டும்.

*
பாலியல் பலாத்காரம் நடந்த 24 மணி நேரத்தில் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அங்கு பெண் டாக்டர் மூலம் பெற்றோர் அல்லது அவர்களால் முன்மொழிவோர் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். மருத்துவ பரிசோதனை அறிக்கையின் நகலை உடனடியாக டாக்டர்கள் பெற்றோரிடம் வழங்க வேண்டும்.

*
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி தொடர்பாக செய்தியை எந்த மீடியாவிலும் புகைப்படத்துடன் வெளியிடக்கூடாது. ஒரு வேளை செய்தி வெளியிட்டால், அந்த தகவலை உடனடியாக சிறப்பு காவல் படை (Special Juvenile Police) தெரிவிக்க வேண்டும்.

*
பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமிக்கு சிறப்பான முறையில் மருத்துவ சிகிச்சை அவசியம் ஏற்பட்டு, அதற்கான நிவாரணம் தேவைப்பட்டால் சிறப்பு நிதிமன்றத்தில் (Special Court) விண்ணப்பித்து இடைக்கால நிவாரணம் பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது (சட்ட விதிமுறை 7ன்படி).


*
அரசாங்கம் கொண்டுவந்துள்ள ‘‘பாலியல் குற்றவாளிகளிடமிருந்து சிறுமிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிமுறைகள்-2012’’ (POCSO ACT & RULES-2012) சட்டத்தில் குழந்தைகள் மற்றும் சிறுமி என்பதற்கான அர்த்தமும் வயதும் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி 18 வயது நிரம்பாத பெண்ணை சிறுமி என்று சட்டம் முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்த வயதில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவோர் சட்டத்தில் பாதுகாப்பு பெறும் தகுதியுடையவர்கள். அவர்களை சீரழிப்பவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்பட தகுதியுள்ளவர்கள்.


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

Techniques for International fund raising

Local fundraising techniques

How to write the proposals